தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

41views
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுதர்சனன் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் மஞ்சள் பைகளை உபயோகிப்போம் கழிவுகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்குவோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பேரணி சென்றது. அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, வாடிப்பட்டி சமுதாய மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!