தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

65views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வன்னியராசு தலைமையில், திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ விபத்துகளை தவிர்ப்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில்  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செயச்சந்திரன், சமுதாய செவிலியர் மங்கம்மா மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பூபன்சக்கரவர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!