தமிழகம்

காட்பாடியில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்.பி.

52views
வேலூர் அடுத்த காட்பாடி சில்க் மில் அருகில் தலைக்கவசம் உயிர் கவசம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். 2 சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்பு ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதில் 1-வது வேலூர் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், ஜெயின்பள்ளி உரிமையாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!