தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல் காவல்துறை அதிரடி

147views
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை செக்போஸ் வழியாகவும் காட்பாடி வழியாக செல்லும் ரயில்களிலும் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் கடத்தி வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காட்பாடி போலீசார் காட்பாடி ராம் நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (32) திருப்பூரை சேர்ந்த ஜெகதீசன(24) ஈரோடு மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் (24)ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்த 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.  இந்த 3 பேரும் காட்பாடி பகுதியில் வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!