தமிழகம்

கடல்அட்டை கடத்தலில் ஈடுபட்ட பெரிய பட்டணத்தை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.

33views
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் த/பெ. முகமது மீராசா தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த குற்றத்திற்காக வனச்சரக அலுவலர் எம்.பி.செந்தில்குமார் மற்றும் குழுவினர் கைது செய்தனர். கடல்அட்டை குற்ற வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து பல வனவிலங்கு குற்றங்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளியான இவரை ராமநாதபுரம் வனவிலங்கு காப்பாளர் பாகன் ஜெகதீஷ் சுதாகர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி ஜாஹிர் உசேன் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.

இச்செய்தியைக் கேட்டு கடல் அட்டை கடத்தல்காரர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!