தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்த நகர மன்ற தலைவர்

204views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார்டுகளிலும் நேரடியாக சென்று குப்பைகளை எவ்வாறு பிரித்துக் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகர மன்ற தலைவர் சகுந்தலா தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து ஒரு நாள் விடுப்பு அளித்து அவர்களுடைய வேலையே நகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று குப்பையிலே சேகரித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டு வரும் நகராட்சி அதிகாரிகளை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் தேன்மொழி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டி தாய் இருபதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் உட்பட நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!