தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே அரசின் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

200views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் கட்டிமுடிக்கபட்டும் 2 வருடங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த புதிய கால்நடை மருந்தகம் மற்றும் நடுநிலை பள்ளியின் சமையலறை உள்ளிட்ட கட்டிடங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர் வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகளிர் உதவித்தொகை, தையல் இயந்திரம், கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் சுமார் 1219 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 6 இலட்சத்து 65 ஆயிரத்து 274/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்:-
லணிகவரி மற்றும் பதிவு துறைமூலம் கடந்த ஓராண்டில் இதுவரை 95 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதேபோஅன்று தமிழக அரசின் வருவாய் அனைத்து துறையிலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் அரசின் நலத்திட்டங்கள் தொடந்து வழங்கப்படும் என்றார். மேலும் இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்து நலதிட்ட உதவிகளை வழங்கினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!