124views
மாநில அளவில் நடைபெற்ற உழவர் தின விழாவில் விவசாய பெண்கள் குழுவினர் பங்கேற்றனர்.
மதுரை வேளாண்மை பல்கலைக்கழக பொன்விழாவினை முன்னிட்டு , மாநில அளவிலான உழவர் தின விழா மதுரை ஒத்தக்கடை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை ஆராயச்சி மையத்தின் சார்பாக அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, போன்ற ஊர்களை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க உறுப்பினர்கள், உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி””விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பாக முதன்முறையாக அமைக்கப்பட் அரசகுளம் மகளிர் விவசாய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் உழவர் தின விழாவில் பங்கேற்றனர். விழாவில், தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகளை பெண்கள் பார்வையிட்டனர். காய்கறி உற்பத்தி,. பழங்கள் பயிர் சாகுபடி, புதிய தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி தெரிந்துகொண்டனர் .






