தமிழகம்

வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு

66views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிப்பாளையம் கிராமத்தில் கடந்த 8-ம் தேதி மாடு விடும் திருவிழா நடத்தப்பட்டது.  விழாவில் ஏரளமான இளைஞர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.  இதில் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) நண்பர்களுடன் கலந்துகொண்டார். அப்போது சீறிப் பாய்ந்த காலை ஒன்று சுரேஷ்குமாரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.    இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!