தமிழகம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு பேர் பலி

69views
வெவ்வேறு சம்பவங்களில் மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெவ்வேறு சம்பவங்களின் இரண்டு பேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் வீரமுத்து மகன் முத்துப்பாண்டி .இவரும் முத்துக்குமார் என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்துக்குமார் பைக்கை ஓட்ட முத்துப்பாண்டி பின்புறம் அமர்ந்து சென்றார். அவர்கள் சென்ற பைக் மேலூர் விரகனூர் நான்கு வழி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகா மடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதிய லாரியை தேடி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
அண்ணா நகர் சக்கா தோப்புவை சேர்ந்தவர் பால் பாண்டி 50. இவர் குருவிக்காரன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த விபத்து குறித்து பால்பாண்டியின் தம்பி குமார் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!