தமிழகம்

ராஜபாளையத்தில் குளிர்சாதனப்பெட்டி பழுது நீக்கும் பணியின் போது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

82views
ராஜபாளையம் அருகே ஆசிரியர் காலனி சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சரவணகுமார் மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சரவணக்குமார் சென்னையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் கார்த்திக் ராஜபாளையம் பூபால் பட்டி தெருவில் உள்ள கடையில் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார்.
இன்று மாலை அவர் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டியை பழுது நீக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்கேயே மூர்ச்சையானார். இதனை அடுத்து சக ஊழியர்கள் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் கார்த்திக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!