தமிழகம்

அரியமான் கடலில் குளிக்க சென்ற கடற்படை வீரர் பலி

48views
உச்சிப்புளி அரியமான் கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கி இந்திய கடற்படை வீரர் பலியானார்.
மதுரை அழகப்பன் நகர் சம்பந்தர் தெரு முத்துகிருஷ்ணன் மகன் வாட்சன் 23, திருநகர் சிவக்குமார் மகன் விக்னேஷ் 22, திருமங்கலம் ஜெயராமன் மகன் விக்னேஷ்வர் 22, ஒத்தக்கடை சமயன் மகன்
பிரவீன்குமார் 22, பாறைப்பட்டி செல்லச்சாமி மகன் வைர முருகன் 21, டி.கல்லுப்பட்டி கணேசன் மகன் அருண்பாண்டியன் 21. இவர்களில் வாட்சன் இந்திய கடற்படை கோவை அக்ரனி முகாமில் பணியாற்றி வந்தார். மீதி 5 பேரும் மதுரையில் உள்ள கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகின்றனர்.
இவர்கள் 6 பேரும் மதுரையில் இருந்து இன்று காலை 6:45 மணிக்கு ராமேஸ்வரம் கிளம்பும் ரயிலில் உச்சிப்புளி வந்திறங்கி ஆட்டோ மூலம் அரியமான் கடற்கரை சென்றனர். மாலை 5:45 மணியளவில் வாட்சன், விக்னேஷ் ஆகிய இருவரும் கடலில் குளிக்கச் சென்றனர்.
அப்போது எழுந்த ராட்சத அலையில் இருவரையும் இழுத்துச் சென்றது. சிறிது நேரத்துக்கு பின் வாட்சன் உடல் ஒதுங்கியது. மாயமான விக்னேஷை மெரைன் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!