தமிழகம்

உசிலம்பட்டியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

100views
உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழக ஆளுநர் என். ஆர். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் என் ஆர் ரவியை பதவி விலக கோரி மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்மாபட்டி பாண்டியின் ஆணையின் பேரில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.மகேந்திரன் மாநிலச் செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி சரவணகுமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
இதில் வட்டார தலைவர்கள் சேடப்பட்டி புது ராஜா, ஜெயராமன் உசிலம்பட்டி வெஸ்டன் முருகன் செல்லம்பட்டி நன்மாறன், மாயாண்டி ஏழுமலை பேரூர் கணேசன் நகர மன்ற துணைத் தலைவர் தேன்மொழி ஒன்றிய கவுன்சிலர் ரம்யா ரங்கமலை முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ .எல். விஜயகாந்த் முன்னாள் மாவட்ட துணை தலைவர் கருப்பையா முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் காந்தி சரவணன் மாவட்டச் செயலாளர் வினோத் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தவமணி முத்துலட்சுமி வாசிமலை பாண்டீஸ்வரன் முருகேசன் பெரியசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!