தமிழகம்

திமுக அரசை கண்டித்துகாட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அப்பு பங்கேற்பு

138views
தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் கண்டன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 14-ம் தேதி நடந்தது. அதன் படி வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் அதிமுக ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுபாஷ் வரவேற்றார். வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம், உரையாற்றினார்.  மாநகர பொருளாளர் மூர்த்த, விவசாய அணி மாநகர செயலாளர் சுந்தர்ராஜ்,காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன், பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராமமூர்த்தி, புகழ்வேந்தன், கிளை செயலாளர்கள் செந்தில்குமார். நேதாஜி, மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாநகர மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரம்மபுரம் பிரகாசம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!