தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

46views
தமிழக எதிர்க்கட்சித் தலைவர்,அஇஅதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரபட்டி பகுதியில் விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு,மின் கட்டணம் உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக அஇஅதிமுக சார்பில் தளவாய்புரம் மற்றும் முத்துச்சாமிபுரம் பகுதியில் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும் விடியா திமுக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!