தமிழகம்

திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

37views
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி
உதுமான் அலி சந்திரசேகரன்  தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்குபெற்று பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை கலைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான சே. நீலகண்டன்,  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர் நாகராஜ்,  தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் ஊழியர் சங்கத்தினர் உரையாற்றினர்.
செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!