தமிழகம்

பல்லவராயன்பட்டியில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு

61views
தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் வரும் 12-ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்குரே பிரவீன் உமேஷ் டோங்கிரி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஏழைகாத்தம்மன் வல்லாடிக்கார சுவாமிகள் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் அனுமதியோடு வரும் 12ஆம் தேதி பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போதுஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் உத்தமபாளையம் ஆர் டி ஓ பால்பாண்டி போடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!