காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்துக்கு வந்த அனைத்து கட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நட்வடிக்கைகளை மேற்கொள்ளும்.