இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று (மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசிஎன தெரிகிறது.
ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
145views
You Might Also Like
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த விருதம்பட்டியில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை திறந்துவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்...
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் அதிரடி டைட்டில் டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மாரி செல்வராஜ் வெளியிட்டனர்!
“மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது....
திங்க் இண்டீ – யின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு…
திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது....




