கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
319views
You Might Also Like
பக்திக்கு வயது முக்கியமில்லை,116 வயதில் திருப்பதி -. திருமலை மலை ஏறி சாதனை செய்த சென்னை நவநீதம்மாள்
ஆந்திர மாநிலம் திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி பெருமாளை கால்நடையாக சென்று தரிசனம் செய்ய சென்ற சென்னையை சேர்ந்த 116 வயது முதாட்டி நவநீதம்மாள் 3550...
திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு பெருமாளின் கருடசேவை
திருப்பதி திருமலையில் ஆனி மாதம் பெளர்ணமி முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் நான்கு மாடவீதிகளில் கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு திங்கள் இரவு அருள்பாலித்தார். கே.எம். வாரியார்...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்
திருப்பதி திருச்சானூரில் நடைபெற்றுவரும் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் ஒரு பகுதியாக பத்ம சரோவரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் 3 முறை வலம் வந்து ஸ்ரீபத்மாவதிதேவி மூன்றாம் நாள்...
ஐதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பிறந்தநாள் முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நந்தமுரி டாரகா ராமாராவ் (NTR) 103-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் பேரன் சினிமா நடிகர் ஜூனியர்...
பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வருக்கு வரும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கீடு
கேரளாவில் கடந்த வாரம் காங்கிரஸ் முதல்வர் சதீஷன் புதியதாக பதவி ஏற்றார். வரும் 26-ம் தேதி செவ்வாய்கிழமை புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம்...




