கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
124views
You Might Also Like
பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் குறித்த துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு
ஜம்மு - காஷ்மீர் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிர்நீத்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம்...
சித்தூரில் ஆந்திர மாநில பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழக பத்திரிக்கையாளருக்கு கெளரவம்
ஆந்திர மாநிலம் சித்தூர் ஜெ.பி.ஏ.சி.மகாலில் ஆந்திர மாநில ஒர்க்கர்ஸ் ஜெர்னலிட்டு பெடரேசன் 4 - வது மராட்டில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் வேலூர் மாவட்டத்தை ராஜ்பாபு, வாரியார், ரகுமான்,...
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆந்திரபிரதேச ஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசன் (APWJF) 4-வது மாநாடு
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஜேபி மீட்டிங் ஹாலில் ஆந்திரபிரதேசஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசனின் 4-வது மாநாடு நடந்தது. சிறப்பு விருந்தினராக ஆந்திரபிரதேச மாநில தெலுங்கு தேச கட்சியை...
டெல்லி சென்றடைந்தார் பாரதப் பிரதமர்
தாய்லாந்து, ஸ்ரீலங்கா, தமிழக பயணத்தை முடித்து கொண்டு இன்று இரவு தலைநகர் டெல்லி சென்றடைந்தார் பிரதமர் மோடி, வேட்டி, சட்டையுடன் விமான நிலையத்திலிருந்த் காரில் சென்றார் தனது...
திருமலையில், இராமநவமி முன்னிட்டு பவனி
திருப்பதி - திருமலையில் இராம நவமியை முன்னிட்டு மாடவீதியில் பக்தன் அனுமான்மீது அமர்ந்து இராமபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...