தமிழகம்

‘தலைநகரில் தான் புதிய விமான நிலையம் இருக்க வேண்டும் என்பது இல்லை ! தமிழ்நாட்டின் மையப்பகுதி தஞ்சாவூர் திருச்சி இடையே ஏராளமான இடமும் விமான நிலையமும் இருக்கிறது!!’ – தமிழக ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் வலியுறுத்தல் !

37views
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.  விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும் நிபுணர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய காலகட்டத்தில் விமான பயணம் என்பது பேருந்து பயணங்கள் போல மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அனைவருக்குமான பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
ஒரு பெரிய சர்வதேச விமான நிலையம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை,
இதற்கு உலகில் பல உதாரணங்கள் இருக்கிறது உதாரணமாக ஜெர்மனி நாட்டில் (Berlin) பெர்லின் தலைநகரமாக இருந்திருக்கிறது தற்பொழுது ஜெர்மனி நாட்டின் தலைநகரமாக (Bonn) பான் திகழ்கிறது.  அங்கே அந்த தலைநகரில் விமான நிலையம் என்று ஒன்று இல்லை.  அருகில் “குளோன்” என்ற நகரில் தான் சிறிய விமானம் நிலையம் ஒன்று உள்ளது ஆனால் சர்வதேச மிகப்பெரிய விமான நிலையம் (Frankfurt) பிராங்க் பர்ட் நகரில் தான் உள்ளது இது ஜெர்மனியின் தலைநகரம் இல்லை.
தமிழ்நாட்டில் சென்னை-சேலம், சென்னை-மதுரை, சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-புதுச்சேரி ஆகிய நகரங்களில் விமான நிலையம் இயங்கி வருகிறது.
தற்பொழுது சென்னை தஞ்சாவூர் இயக்கப்பட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது, தஞ்சாவூரில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் பயன்பாட்டில் உள்ளது 1980களில் வாய்தூத் (Vaydoot) விமானம் சென்னை தஞ்சாவூருக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அது ராணுவ விமான நிலையமாக இருந்து இயங்கி வருகிறது.
தற்பொழுதுள்ள சென்னைக்கு தேவைக்கான போதுமான சர்வதேச விமான நிலையம் சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.  ஆனால் பிற்காலங்களில் விமான போக்குவரத்து மிக பெரிய அளவில் இருக்கும் என்பதால் பெரிய விமான நிலையம் மேலும் ஒன்று வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  அதன் காரணமாகத்தான் பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் பல மாநிலங்களில் பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் மாநிலங்களின் தலைநகரங்களை மாற்றலாம் ஆகையால் தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சியை கொண்டு வரலாம் என்று யோசனையை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் கூட முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே அடுத்த புதிய விமான நிலையம் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமானால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து வந்து பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்கிறார் அதேபோல் தமிழ்நாட்டின் பல பாகங்களில் உள்ளவர்கள் தங்கள் பயணங்களுக்காக சென்னை வந்து சென்னை விமான நிலையம் மூலமாக பல வெளிநாடுகளுக்கு செல்லுகிறார்கள்.  இது மிகப்பெரிய தூரமாகும் தூரம் மட்டுமல்ல சென்னையிலேயே அடுத்த மிகப்பெரிய பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் கட்டுவதால் மக்கள் அனைவருமே சென்னையை நோக்கி வரும் நிலையையே ஏற்படுத்தும்.
இதனால் வளர்ச்சி என்பது தொழில் துறையிலோ அல்லது மற்ற நிலைகளிலோ சென்னையை மட்டுமே நோக்கியதாகவே இருக்கும், தன் தேவைகளுக்காக மக்கள் சென்னையை நோக்கியே வர வேண்டியிருக்கும். இதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பரவலாக்கப்படாது.  டைடெல் பார்க் (Tidel park) போன்ற ஐடி துறையை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு சென்றதால் தான் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பரவலாக்கபட்டுள்ளது.
அதே போல் சென்னையின் முக்கிய மையப்பகுதியில் ஏற்கனவே தற்போது தேவைக்கு போதுமான விமான நிலையம் உள்ளது.  தற்பொழுது தஞ்சாவூரிலும் திருச்சியிலும் விமான நிலையம் உள்ளது மேலும் தஞ்சை திருச்சிக்கு இடையே ஏராளமான தரிசு நிலங்களும் உள்ளது.  தமிழ்நாட்டின் மையப்பகுதியாக திருச்சியும் தஞ்சையும் இருப்பதால் வந்து செல்வது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இது மிக வசதியானதாக அமையும்.
மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் மையப் பகுதியில் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் தொழில்துறைகள் பரவலாக மிகப்பெரிய வளர்ச்சி பெறும் தலைநகர் சென்னையை நோக்கியே மக்கள் தங்கள் பிழைப்புக்காக ஊர்களை விட்டு கிராமங்களை விட்டு வருவது குறையும் வரவும் மாட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் கூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை துவக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.  அது மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
பிற்காலங்களில் விமான போக்குவரத்து என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய முக்கிய போக்குவரத்து ஆக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆகவே தமிழ்நாட்டின் மையப்பகுதியான தஞ்சாவூர் விமான நிலையத்தை அடுத்த மிகப்பெரும் விமான நிலையமாக மாற்றுவது மிக அவசியமாகிறது.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மற்றும் பல பாகங்களில் இருந்து சென்னை மீனம்பாக்கம் வந்து பயணிப்பது போல் சென்னையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் மற்றவர்கள் மையப்பகுதியாக உள்ள தஞ்சாவூர் திருச்சியில் போய் சர்வதேச விமான பயணங்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. தூரம் அனைவருக்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
இது தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் தொழில்துறைகள் எல்லா இடங்களிலும் பரவலாக வளரும் தஞ்சை திருச்சி இடையே விவசாய நிலங்கள் அதிகமாக இல்லை தரிசு நிலங்கள் அதிகளவில் இருக்கிறது.  ஆகவே தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை கருதி தஞ்சாவூரில் விமான நிலைய அமைப்பதே மிகச் சிறப்பானதாக இருக்கும் இதை தமிழக முதலமைச்சர் அவர்கள் முக்கியமாக பரிசிலிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய புதிய விமான நிலையத்தை தஞ்சாவூரில் உருவாக்க வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய பலமாக அமையும் என்பதுடன், சென்னை அருகிலேயே மீண்டும் ஒரு விமான நிலையம் வேண்டும் என்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இதை எதிர்க்கட்சிகளும் சென்னை பரந்தூரில் தான் புதிய விமான நிலையம் வர வேண்டும் என்ற கருத்திலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும் ஒரு நாடு “வளர்ந்த நாடு” என்று குறியீட்டுக்கு எப்பொழுது வருகிறது என்றால் போக்குவரத்தும் தொலை தொடர்பும் பரவலாக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் அனைவருக்கும் சமமானதாக உருவாக்கப்பட்டால் தான் வளர்ந்த நாடு என்று அறிவிக்கப்படுகிறது
ஆகவே ஆட்சியாளர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும், நிபுணர்களும் இதை முறையே ஆராய்ந்து தஞ்சாவூரில் புதிய பெரிய விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் கொண்டு வருவதால் தமிழ்நாட்டிற்கு அதன் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதை உணர்ந்து மீண்டும் சென்னையிலேயே அடுத்து ஒரு விமான நிலையம் வேண்டும் என்பதை கைவிட்டு தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு முறையான மாற்று யோசனையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களையும் தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வசீகரன்
மாநிலத் தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
9003260744

Right Click & View Source is disabled.

error: Content is protected !!