தமிழகம்

வேலூரை சேர்ந்த 2 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்பு, தலைமை நீதிபதி. பதவிபிரமாணம் செய்து வைத்தார்

167views
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றனர். அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
8 வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதிகளாக இருந்த 7 பேர், என 15 பேர் பதவி ஏற்றனர். இவர்களில் வழக்கறிஞர் என்.ரமேஷ், மாவட்ட நீதிபதி திருமகள் ஆகிய 2 பேர் வேலூரில் பிறந்து பின் படிப்படியாக முன்னேறியவர்கள்.  இவர்களில் நீதிபதி திருமகளின் கணவர் சந்திரசேகர் ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), நீதிபதி திருமகள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும், நீதி நடராஜன் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றுவார்கள்.

வேலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பார்கவுன்சில் தலைவர் மறைந்த மார்கபந்துவின் மகளும்,வேலூர் அரசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அருளரசுவின் (ஓய்வு) தங்கைதான் நீதிபதி திருமகள், இவர்களுக்கு டாக்டர் அருளரசு, வேலூர் வழக்கறிஞர் பென்னடிக்கென்னடி மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் கே.எம். வாரியார், ஏ.ஆர்.லட்சுமணன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!