தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

19views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயண திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பெருமாள், செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட தலைவர் குமரவேல் வரவேற்றார். தொடக்கவுரையை மாவட்ட செயலாளர் சங்கர் ஆற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அழகுசுந்தரமும், மாநில பொருளாளர் பிச்சைகண்ணு யாற்றினார்கள்.
வேலூர் மாவட்ட தலைவர் நடராஜன். செயலாளர் கண்ணபிரான், பொருளாளர் குமரவேல், அணைக்கட்டு பிரிவு லோகநாதன், ராஜேந்திரன், சாமிநாதன், காட்பாடி பகுதி மார்கண்டேயன், ஜார்ஜ், லோகநாதன், ஜெயசங்கர், கஜேந்திரன், சிட்டிபாபு, விநாயகம், சேன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீப காலங்களில் உயிரிழந்துள்ள சாலை பணியாளர்களுக்கு இந்த செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது. புதியதாக தமிழகத்தில் முதல்வர் விஜய்தலைமையில்தவெக ஆட்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறது. நெடுஞ்சாலைதுறையில் சாலைப்பணியாளர்களாக பணியாற்றி உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்குவாரிசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தர ஊதியம் ரூ.1900 – ஆக உயர்த்தி அன்ஸ் கில்டு பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!