கோவை: பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற எங்களுக்காக விளம்பரத்தில் பொது ஜன தொடர்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.




