தமிழகம்

இராணிப்பேட்டை அடுத்த வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் மனைவி ரயில் மோதி உயிரிழப்பு, அதிமுகவினர் அஞ்சலி

71views
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் கல்லாலங் குப்பம் அதிமுக ஊராட்சி பொறுப்பாளரும், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளருமான எல்ஐசி ராமஜெயத்தின் மனைவி குமுதவல்லி (40) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு பெங்களூர் சென்றுவிட்டு வாலாஜா ரோடு ரயில்நிலையத்தில் பிருந்தாவன் விரைவு ரயிலில் இறங்கி ரயில்பாதையை கடந்தபோது அதில் வேகமாக வந்த விரைவு ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதற்கு சோளிங்கர் மேற்கு பகுதி அதிமுகவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர். பொதுவாக இந்த ரயில்நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்றும் அதற்காக அமைக்கப்பட்ட ரயில்வே நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டும், இதுபோன்ற விபரீதம் நடந்துவருகிறது. இந்த விபத்து குறித்து காட்பாடி இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!