தமிழகம்

அமைச்சர் துரைமுருகன்தொகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை ஒரு ஆண்டு ஆகியும் திறப்பு விழா இல்லை

62views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் சேர்க்காட்டில் சித்தூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அருகில் சுமார் 100 நோயாளிகளுக்கு பயன்பெற இத்தொகுதியின் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்பாட்டில் மருத்துவ துறை சார்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டது. சில கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை ஒரு ஆண்டாகியும் திறப்பு விழா காணப்படவில்லை, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகே திருவலம் மற்றும் விண்ணம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருவது அனைவருக்கும் தெரியும், ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனையை திறக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!