தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா

44views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ குடோன் எதிரில் வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நெடுஞ்சாலைதுறை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தலைமைதாங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின் மரக்கன்றுகள் நடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை வேலுர் கோட்ட பொறியாளர் குமரேசன். நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், நெடுஞ்சாலை துறையினர், சட்டப்பணித்துறையினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!