தமிழகம்

55 வது கல்லூரி நாள்

47views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது கல்லூரி நாள் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கல்லூரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா, சட்டக்களம் நாளிதழ், நிறுவனர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக எமனேஸ்வரம், சௌராஷ்டிரா சபை, தலைவர் கோவிந்தன் மற்றும் இராமநாதபுரம், மாவட்ட ஆட்சியர் வளாகம், இணை தாசில்தார், சத்யபாமா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பல்கலைக்கழக ரேங்க் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி, முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, மின் மற்றும் மின்னணு பொறியியல், துறைத்தலைவர் இராமநாதன் கலந்துகொண்டார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பங்குபெற்றனர். நிறைவாக வேதியியல் துறைத்தலைவர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!