தமிழகம்

வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது, பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு !!

428views
வேலூரில் பிரபல தனியார் கல்லூரியான ஊரிசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த அன்பழகன், அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் இதுகுறித்து வேலூர் எஸ்.பிக்கு நேரில் மனு கொடுத்தார். கல்லூரி மாணவ – மாணவிகளும் ஒருநாள் மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன்படி வழக்குபதிந்து தலைமறைவான வரை சுமார்1 மாதம் வரை, விட்டு, விட்டு தேடிய நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ராசனபள்ளியில் மறைந்து இருந்த அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!