தமிழகம்

காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவ ராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை பூஜை !!

14views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவ ராய மலையில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், வெள்ளிகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காட்பாடி சுற்றுப் புறத்தில் இருந்து ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜையில் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தமிழரசி வெங்கடேசன், செந்தில்குமார் முதலியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை ரகுராமன்யாதவ், டீக்காராமன் யாதவ் குடும்பத்தார் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!