குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க ” .
கிருஷ்ணா வென்ட்ரிலோக்விசம் (ventriloquism) முறையில் கலர்மச்சான் கதாபாத்திரத்தோடு தொகுத்து வழங்கும், இந்த நிகழ்ச்சியில் சுட்டிக் குழந்தைகளின் குறும்புத்தனமான மழலை பேச்சும், அவர்களது தனித்திறமைகளும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
நிகழ்ச்சியின் முதல் பகுதியாக சுட்டிக்குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் அறிமுகமாகி அசத்துகிறார்கள்
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக தொகுப்பாளர்கள் கிருஷ்ணா, கலர்மச்சானின் கலகலப்பான கேள்விகளுக்கு, சுட்டிக்குழந்தைகள் மழலை பேச்சில் பதிலளிப்பது அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது.
நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியாக, சுட்டிக்குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும், கலந்து கொண்டு சிறு வயது நினைவுகளை நினைவூட்டும் வகையில் கலகலப்பான கேம் ஷோ பகுதியும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
நிகழ்ச்சியின் இறுதி பகுதியாக நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி ஜாலியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ச்சி நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5.00 மணிக்கு ஜெயா டிவியில், ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான ” வாலு பசங்க ” நிகழ்ச்சியில் உங்கள் குழந்தைகளும் கலந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு…. 4 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்குபெற அவர்களை பற்றிய முழுவிவரங்களை 89255 13374 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யவும்.
துபாய் : துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக்...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம்...
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர்...
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு...
நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்கு எதிரான நல்லவர்களின் ஒன்பது...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.