தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை. தயாநிதி டிஸ்சார்ஜ் !

20views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரின் மகன் துரை. தயாநிதி கடந்த டிசம்பர் 6-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மார்ச் 14-ம் தேதி வேலூர் தனியார் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு செப், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் துரை. தயாநிதியை மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தார் காரில் அழைத்து சென்றனர்.
மருத்துவமனையை விட்டு வெளியேறிய துரை. தயாநிதியை புகைப்படம் எடுக்க விடாமல் சிஎம்சி மருத்துவமனை பாதுகாவலர்கள், ஊழியர்கள் செய்தியாளர்களை தாக்க முயன்றதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!