தமிழகம்

வேலூர் திருமலை – திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி மாதம் 1-வது சனிக்கிழமை பூஜை !

33views
வெங்கடேஸ்வர சுவாமிக்கு உகந்த மாதம் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள். புரட்டாசி மாதம் துவங்கி ஒன்று முதல் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி கும்பிடுவார். அதன் படி புரட்டாசிமுதல் சனிக்கிழமை வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தகவல் மையத்தில் உள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காலை மற்றும் மாலை முழுவதும் விசேஷ பூஜை நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!