தொலைக்காட்சி

தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2” செப்டம்பர் 22 முதல் கலைஞர் டிவியில் ஆரம்பம்

12views
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “தமிழோடு விளையாடு” முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் செப்டம்பர் 22-ந் தேதி முதல் ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் பிரமாண்டமாக உருவாகிறது.
தமிழகம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் இந்த சீசனில் பங்கேற்று அசத்துகின்றனர். ஞாயிறுதோறும் மாலை 6.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை கண்டு களியுங்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!