தமிழகம்

கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் நடைப்பெற்ற ஓணம் பண்டிகை கூடுகை

201views
கன்னியாகுமரி மாவட்டம் கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை கூடுகை நடைபெற்றது . விழாவில் திருமதி. ஸ்ரீதேவி பிரின்ஸ், சுஜாதா சாலமன் , இந்திரா லபன், கலா , ஷாலினி ,தமிழ் செல்வி ஆகியோர் வழிநடத்தலில் கலந்து கொண்ட அனைவரும் திருஓணக்கலாச்சார உடை அணிந்து பல வண்ண கோலம் இட்டு மதியம் பாரம்பரிய உணவு வகைகளை பரிமாற திருஓண நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
மருத்துவர் தி .கோ .நாகேந்திரன் சமூக சேவகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறுகையில் அனைத்து பண்டிகைகளும் பரிமாற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது. எனவே நாமும் நம் அன்பை பரிமாறுவோமாக. இல்லாதவர்களுக்கு தேவையான செல்வத்தையும் பொருட்களையும் அறிவையும் பரிமாறுவோமாக. இந்தப் பரிமாற்றம் நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று கூறினார்.

விழாவிற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர். ஹரிதாஸ், வழக்கறிஞர். முஹம்மது பிலால், வழக்கறிஞர் .டல்லஸ் ,திரு. ஜஸ்டிஸ் மில்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!