தமிழகம்

நாட்டிற்காக இரட்டைஆயுள் தண்டனை பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ. சி- யின் பிறந்த தினத்திற்கு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

25views
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இன்று காலையில் ( 5-9-2024 ) மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோல் ஆட்சியையும் எதிர்த்ததோடு மக்கள் போராட்டங்களின் மூலம் தான் விடுதலையை பெற முடியும் என்ற கொள்கை பிடிப்புடன் வெள்ளைக்காரர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நம் நாட்டை விட்டு அவர்களை விரட்டி சுதந்திர தேசத்தை பெறும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதற்காக இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்ற செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிக்கு ஆரல்வாய் மொழியில் உள்ள மார்பளவு உருவச் சிலைக்கு இந்த ஆண்டு ஆண்டாண்டு காலமாக மரியாதை செலுத்தும் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!