தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

25views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த மாணவி படித்து வருகிறார். பயிற்சிக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.  கடந்த 1-ம் தேதிவழக்கம் போல் பயிற்சிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, பணியில் இருந்த எலும்பு முறிவு அரசு டாக்டர் பாபு, மாணவியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தாக தெரிகிறது. குறித்து பெற்றோர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார், டாக்டர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சில போலீசாரின் ஆலோசனைப்படி டாக்டர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.  இதனால் ஆத்திரம் அடைந்த பாமகவினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிடப்போவதாக நேற்று முன்தினம் தகவல் பரவியது.  தனியாக மருத்துவ மையம் நடத்திவரும் பாபு தலைமறைவாக உள்ளான்.  குடியாத்தம் காவல் துறையின் மெத்தன போக்கே சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் டாக்டர் கைது செய்யப்படவில்லை? என்பது குடியாத்தம் பொதுமக்களின் குற்ற சாட்டாக உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!