தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

120views
தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 53 மாணவ மாணவியருக்கு, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகமும் 31.08.2024 சனிக்கிழமை அன்று இணைந்து நடத்திய 13 வது ஆண்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவுப் பரிசு, தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருள்களும் வழங்கப்பட்டன.

மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகத் தலைவர் முகம்மது மகபூப் ஆலிம் பாகவி தலைமை தாங்கினார்.  பணிநிறைவு சப் கலெக்டர் நல்லமைதீன் வரவேற்றுப் பேசினார். சாதனை படைத்த மாணவர்களை, தென்காசி தாசில்தார், மணிகன்டன், காவல்துறையினர், பள்ளிநிர்வாகத்தினர்கள், தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத்தினர், கல்வியாளர்கள், மருத்துவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள் தனது கரங்களால் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கி பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.

கல்லிடை தமிழ் ஆசிரியர் உமர் பாரூக் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!