தமிழகம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

31views
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்கள் மீது அத்துமீறும் இஸ்ரேலிய அரச பயங்கரவாத செயல்பாட்டுக்கும், இஸ்ரேல் அரசுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவி செய்துவரும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து‌ ராஜ் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன், இணைந்தெழு தமிழ்நாடு, சமூக நல்லிணக்க முன்னணி, கிறித்தவ மக்கள் களம் போன்ற சமூக அமைப்புகளின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!