தமிழகம்

அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ! என்ஐடி இயக்குநர் பங்கேற்பு !!

30views
வேலூர் அருகே உள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரி நிறுவன தலைவர் எஸ். இராமதாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி. கே. கோபி நாதன் வரவேற்றார்.  செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதிரன், டிரஸ்டி சீதாலட்சுமி, இயக்குநர்கள் ஆர். பிரசாந்த், டி. கிஷோர்குமார். டாக்டர் டி. அரவிந்த் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினரை கல்லூரி துணை முதல்வர் டி.சரவணன் அறிமுகபடுத்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாகலாந்து என்ஐடி இயக்குநர் ஏ. இளையபொருள் கலந்து கொண்டு 271 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிபேசினார்.  விழாவில் முன்னாள் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தாமோதரன், பொறியாளர் மோகன்தாஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ – மாணவிகள், கல்லூரி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் சாண்டில்யன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!