தமிழகம்

வேலூர் அருகே காட்பாடி சேர்க்காட்டில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவிய (ஓவம்) கண்காட்சி !!

33views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவியக் (ஓவம்) கண்காட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 15-ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினராக முன்னாள் வேலூர் மைய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
ஓவியங்கள், களிமண்ணால் ஆன சிலைகள், சிட்டு குருவி அமைத்த கூடுகள் பறவைகள் உறையிடங்கள் ஆகியவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தன.  சேர்க்காடு பள்ளி தலைமை ஆசிரியர் சைமன், சென்னை பைன் ஆட்ஸ் அரசு கல்லூரி பேராசிரியர் கவிமணி, விஷூவல் ஓவியர் விஜய் பிச்சுமணி, பயிற்சியாளர்கள் பாலாஜி, கோவிந்தசாமி, கலை ஆனந்த், நாகராஜன், கல்லூரி பயிற்சி ஓவியர்கள் அஸ்வின், அபிஷேக், பாஸ்கர், ஹரிஷ், அர்பன்ராஜ், மணிகண்டன், மீரா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சி வரும் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர் மோகன் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!