தமிழகம்

போதைப்பொருட்கள் பயன்படுத்தல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

45views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதைப்பொருள் பயன்படுத்தல் எதிர்ப்பு கழகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12.08.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் வாசித்த போதைப் பொருட்கள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதி மொழியை 210 மாணவர்களும், 15 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர், இளையான்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி முருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் சஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு, நாட்டு நலப்பணித்திட்ட குழுவினர் இளையான்குடி காவல் துறையோடு ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!