தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

180views
கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் இரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்து முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இராதாகிருஷ்ணன் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் .கோலப்பன், அரசு மருத்துவமனை தக்கலை ,மருத்துவர் கோபிகா விவேக் ரத்த வங்கி மற்றும் பலரோடு இணைந்து இரத்ததான முகாம் நடத்தியவரும் சமூக சேவகருமான மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் பாலன், விஜயலட்சுமி, ரெனி மோள், ஜோசப் ஜென், ராஜேஷ், இரத்த வங்கி ஆலோசகர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பி.எஸ்.டி டிரஸ்ட் நிறுவனர் ராம் சூரஜ் இரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றியும் உறுப்பினர்களுக்கு பாராட்டும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் கொடுத்து சிறப்பித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!