தமிழகம்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா ! அமைச்சர்கள் பங்கேற்பு !!

129views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதியதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.  வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பாபு, 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, சேர்க்காடு ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலைக் கல்லூரி முதல்வர் இந்திரா காந்தி நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!