தமிழகம்

இந்தியன் அபாகஸ் பள்ளியின் 5 வது தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா

58views
இந்தியன் அபாகஸ் பள்ளியின் 5 வது தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று (20.7.2024) நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் திரு. எஸ்.எம். இதாயத்துல்லா, தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத் தலைவர் டாக்டர் நயினுர் ரஹ்மான், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் திரு. கே.எம். அசன்சேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!