தமிழகம்

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதையொட்டி டாக்டர். கலாநிதி வீராசாமி வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

37views
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 3,39,646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்குப் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 7:10 மணிவரை வார்டு 48, 48(அ), 52, 52(அ), 53, 53(அ) ஆகிய வட்டங்களில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் வாக்களித்த வாக்காள பொதுமக்களுக்கு வீதி வீதியாக சென்று நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
இந்நிகழ்வில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி சேகர் எம்.எல்.ஏ., இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி , இராயபுரம் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் வ.பெ.சுரேஷ் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர். வெங்கடேசன் வேம்புலி, மாமன்ற உறுப்பினர்கள் வி. விஜயலட்சுமி விஜயகுமார், எஸ்.கீதா சுரேஷ் பி.வேளாங்கண்ணி வட்டக் கழகச் செயலாளர்கள் இரா. பூபாலன், எம்.ரவி, என்.புகழேந்தி, பி.முருகன், பால லக்ஷ்மணன், கௌரீஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!