தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை புனித சேவியர் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

125views
தமிழகம் முழுவதும் நேற்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர் மாவட்டத்தில் வைத்த நிலையில் காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை அரசு உதவி பெறும் புனித சேவியர் துவக்கப் பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்து விலையில்லா நலத் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.
வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். ஊரக திட்ட வளர்ச்சி இயக்குநர் ஆர்த்தி, வாழ்வாதார இயக்குநர் நாகராஜன், துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மெட்டுக்குளம் ஊராட்சிமன்றதலைவர் அனிதா இளங்கோ, ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!