தமிழகம்

கணிப்பொறி அறிவியல் பயின்ற மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி

36views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, கணிப்பொறி அறிவியல் துறை மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனம் இணைந்து 2020-2025 வரை கணிப்பொறி அறிவியல் பயின்று பட்டம் பெற்ற மாணவ-மாணவியருக்கு மென்திறன் பயிற்சி 10.07.2024 மற்றும் 11.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. கணிப்பொறி அறிவியல் துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். நிகழ்வில் மேஜிக் பஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் மாணவ-மாணவியருக்கு மென்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினர். துறைத்தலைவர் சேக் தாவூத் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!