தமிழகம்

காட்பாடி அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவையை துவக்கி வைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

57views
வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில், மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  கல்லூரி தலைவி, துணைத் தலைவி, செயலாளர், வகுப்பு துறை மாணவதலைவிகள், குழுக்களின் பொறுப்பாளர்கள், பொறுப்புகளை ஏற்றனர்.
கல்லூரி செயலாளர் மேரி ஜோஸ்வின் ராணி தலைமை தாங்கினார். இதில் தேர்வாணையர் வின்சி, துணை முதல்வர்கள் அமலா வளர்மதி, சுமதி மற்றும் அமுதா அரோக்கியமேரி, துறைத் தலைவர்கள், இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் கலைச்செல்வி நிகழச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலீ நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!