தமிழகம்

பேர்ணாம்பட்டில் கந்து வட்டி கொடுமையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

37views
கந்து வட்டி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டி கொடுமையால் பேர்ணாம்பட் பகுதியில் தற்கொலை செய்த தாய் மகன் விசயத்தில் காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும்.
வேலூர் மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடித்து பேர்ணாம்பட் நான்கு கம்பம் பகுதியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சர்பராஸ் கந்து வட்டி கொடுமைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரையாற்றினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் பல்லாவரம் ஜாகிர் உசேன் அவர்கள் கந்து வட்டி கொடுமை குறித்து இஸ்லாம் கூறும் வழிமுறைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்டன உரையாற்றினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் சையத் அலி அவர்கள் வட்டி கொடுமை குறித்தும் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நடக்கும் அவலங்களை குறித்தும் , சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் பேர்ணாம்பட் பகுதியில் கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி கண்டன உரையாற்றினார்.
தீமைக்கு எதிராக களத்தில் நின்ற போராடிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!